Thursday, March 11, 2010

ஏழை சிறுவன்...

இது ச‌மீப‌த்தில் நான் இணைய‌த்தில் ப‌டித்த‌ ஹிந்துஸ்தான் டைம்ஸ் வ‌னிதா வாச்த‌வாவின் தொகுப்பின் தமிழாக்க‌ம்.

“ நான் தின‌மும் அனும‌ன் கோயில் வாயிலில் அந்த‌ சிறுவ‌னை பார்ப்பேன்.வெள்ளை ‌T-Shirt ,க‌ருப்பு பேண்ட் போட்டிறுப்பான். ஒரு கூடையில் நிறைய‌ பூ,மாலை வைத்துக்கொண்டு அம‌ர்ந்து இருப்பான்.நான் கோயிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் என்னிட‌ம் எத‌யாவ‌து வாங்க‌ சொல்லி கேட்பான், நான் கோயிலுக்கு சென்று திரும்பும் போதும் என் காருக்கு அருகில் வ‌ந்து ஒன்னே ஒன்னு வாங்கிகுங்க‌ அக்கா என்று கேட்பான். நான் ஒரு த‌ட‌வை கூட‌ வாங்கிய‌து கிடையாது. அவ‌னுக்கு அருகிலும் நிறைய‌ பேர் பூ விற்பார்க‌ள் அவ‌ர்க‌ள் இவ‌னை போல் வ‌ற்புறுத்தி விற்ப‌து கிடையாது.

ஒரு சில‌ மாத‌ங்க‌ளாக‌ நான் கோயிலுக்கு செல்ல‌வில்லை. இன்று சென்று வ‌ர‌லாம் என்று கோயிலுக்கு சென்றேன். வ‌ழக்க‌ம் போல் கார் கோயிலை நெருங்கும் போது சிறுவ‌ன் தென்ப‌ட்டான்.நான் அவ‌ன் என்னை தொட‌ர்வான் என்று எண்ணி அவ‌னை த‌விற்க நினைத்தேன்.ஆனால் இன்று வ‌ழ‌க்க‌த்துக்கு மாறாக‌ அவ‌ன் என்னை வ‌ற்புறுத்த‌வில்லை. நான் சாமியை த‌ரிச‌ன‌ம் செய்து விட்டு திரும்பும் போதும் என்னை வ‌ற்புறுத்த‌வில்லை. ஒரு வேலை ந‌ம்ம‌ மேல‌ எதாவ‌து கோப‌த்துல‌ இருக்குறானோ என்று எண்ணி.

த‌ம்பி எதுக்கு என்கிட்ட‌ வாங்க‌ சொல்லி நீ கேக்க‌ல‌ ?

நான் எதுக்கு உங்க‌கிட்ட‌ கேக்க‌னும். நீங்க‌ வ‌ச‌தியான‌வ‌ங்க‌, ஆனா ஒரு 5 ரூபாய் கொடுத்து எதுவும் வாங்க‌ மாட்டீங்க‌. பின்ன‌ எதுக்கு கேக்க‌னும். அத‌விட‌ என‌க்கு இத‌ இப்போது விற்று ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்துல‌ நான் இல்ல‌.ஏன்னா என் த‌ங்கை கேன்ச‌ர்ல‌ இர‌ண்டு மாச‌த்துக்கு முன்னாடி செத்து போய்டா..எங்க‌ல‌ விட்டுட்டு எங்க‌ அப்பா போய்டாரு, அவ‌ ம‌ருத்துவ‌ செல‌வுக்கு தான் நான் தின‌மும் எங்க‌ அம்மா க‌ட்டிகொடுக்குற‌ பூவ‌ இங்க‌ வ‌ந்து வித்துகிட்டு இருந்தேன்..இப்ப‌ அவ‌ளே போய் சேந்துட்டா...நீங்க‌ வேணும்னா இன்னைக்கு ஒன்ன‌ free யா எடுத்துக்குங்க‌.....

அன்று அவ‌னிட‌ம் இருந்த‌ எல்லாவ‌ற்ற‌யும் வாங்கி வ‌ந்தாலும் நான் மிக‌வும் குறுகிப்போனேன்...”

ந‌ன்றி: வ‌னிதா வாச்த‌வா, ஹிந்துஸ்தான் டைம்ஸ்

போலி சாமியார்க‌ள் கிட்ட‌ ஏமாறாம‌ல் முடிந்தால் ஒரு ஏழைக்கு உத‌வுங்க‌ள்.,ஏழையின் சிரிப்பில் இறைவ‌னை காணுங்க‌ள்.

No comments: