கல்லூரி காலங்களில் நான் லவ் பண்றேனு சொல்ற பய புள்ளைகள பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கும். அதிலும் என் நண்பன் ரமேசுக்கு மாதம் ஒரு முறை ஒரு லவ் லெட்டர் ஹாஸ்டலுக்கு வரும். அதுக்கு பிறகு அவன் உடுற சல்ல இருக்கே அது தான் ரொம்ப கொடுமை. என்னமோ அவன் மட்டும் தான் அங்க ஹீரோ அப்படிங்குற ரெஞ்சுக்கு பில்டப் கொடுப்பான். இந்த பய தூங்குறதே ஒழுங்கா தூங்க மாட்டான், தூக்கத்துல இவன் உருள்றத கண்ட்ரோல் பன்ன டேபிள தூக்கி போட்டாதான் அதுகுள்ளயே உருண்டுகிட்டு கிடப்பான் நாங்க எல்லாம் நிம்மதியா தூங்க முடியும் இவனுக்கு எப்படி லவ் லெட்டர் ! அதுவும் எல்லாரும் படிக்குற மாதிரி போஸ்ட் கார்டுல வருதே எங்கயோ இடிக்குதேனு ரொம்ப நாளா டவுட். அதுக்கு பிறகு கொஞ்சம் அலர்டா வாட்ச் பன்ன ஆரம்பிச்சோம். கரெக்டா இவன் ஊருக்கு போய்ட்டு ரிட்டன் ஆன ஒரு நான்கு நாளைக்குள்ள லவ் லெட்டர் வரும். அப்புறம் எங்க சிபிஐ விசாரனைல உண்மை தெரிந்தது. பய தனக்கு தானே லவ் லெட்டர் போட்டு இருக்கான்னு. என்ன ஒரு குள்ள நரி தனம்.
டிஸ்கி: கடைசியாக கிடைத்த தகவல் பய இன்னும் கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கான்
3 comments:
no letter only sms
its in 90's no cell phone services..
thanks for coming ramesh..
Post a Comment