Friday, June 15, 2012

க‌வுண்ட‌ர்

க‌திர் அறுக்க‌ ஆளே கெடைக்க‌ல‌ அண்ணே.. பேப்ப‌ர் ப‌டித்து கொண்டு இருந்த‌ க‌வுண்ட‌ரிட‌ம் கூறினார் க‌ண‌க்குபிள்ளை செந்தில். என்ன‌ செய்ய‌ற‌து இன்னும் இர‌ண்டு நாளில் க‌திர் அறுத்து ஆக‌னும் க‌வ‌லையில் ஆழ்ந்தார் க‌வுண்ட‌ர்.

அய்யா சாமி எதாவ‌து த‌ர்மம் ப‌ண்ணுங்க‌ சாமி.. உங்க‌ளுக்கு புண்ணிய‌மா போகும்.. குர‌ல் கேட்டு

டேய் யாருடா அங்க‌.. அவ‌னுக்கு எதாவ‌து மிச்ச‌ சாத‌ம் இருந்தா கொண்டாந்து போடுடா என்று கூறி கொண்டே வெளியே வ‌ந்தார்..காவி வேஷ்டி க‌ட்டி வெளில‌ நின்ன‌ பிச்சைகார‌ன் கிட்ட‌..

உன் பேர் என்ன‌?

சுத்தியான‌ந்த‌ம் சாமி..

என்ன‌டா பேர் இது..

அப்பா , அம்மா வ‌ச்ச‌ பேர் சுப்ர‌ம‌னிங்க‌.. நான் இப்ப‌டி பிச்சை எடுக்க எல்லா எட‌மும் சுத்துற‌தால‌ சுத்தியான‌ந்த‌ம்னு மாத்திடேன் எஜ‌மான்.. பின்னாடி பெரிய ஆளா ஆணா சுத்தியான‌ந்த‌ சுவாமினு மாத்த‌ வ‌ச‌தியா இருக்குமல‌.

ஓ அப்ப‌டியா ந‌ல்லா இருடா.. ஆமா நீங்க‌ எத்த‌ன‌ பேர் இருக்கீங்க‌..

நாங்க‌ ஒரு 30 பேர் இருக்கோம் சாமி ஆளுக்கு ஒரு ப‌க்க‌ம் போய் பிச்சை எடுத்துட்டு ப‌க்க‌த்து ஊர் கோயில் வாச‌ல்ல‌ ப‌டுத்துக்குவோம் சாமி..

ச‌ரி நாளைக்கு அன்னதான‌ம் போட‌லாம்னு இருக்கேன் எல்லாரையும் கூப்டுட்டு காலைல‌ வ‌ந்துடு மூனு வேலையும் இங்க‌ சாப்பாடு. நாளைக்கு ஒரு நாளைக்காவ‌து ஊர் ஊரா சுத்தாம‌ இங்க‌ வெயில் வ‌ற்ற‌துக்கு முன்னாடியே வ‌ந்துடுங்க‌..

ரொம்ப‌ ச‌ந்தோச‌ம் எஜ‌மான்..க‌ண்டிப்பா வ‌ந்துடுறோம்.

காலைல‌ பொழுது விடிந்த‌து

அய்யா நீங்க‌ அன்ன‌தான‌ம் போடுறீங்க‌னு ஒரு 30 சாமியாருங்க‌ வ‌ந்து இருக்காங்க‌..

ஓ அப்ப‌டியா..வ‌ந்துடானுங்க‌ளா..

அந்த‌ க‌திர் அறுவாள‌ ஆளுக்கு ஒன்னு கொடுத்து க‌திர் எப்ப‌டி அறுக்க‌னும்னு சொல்லி கொடுத்து அறுக்க‌ சொல்லு.. எவனாவ‌து எதாவ‌து சொன்னா க‌ட்டி வ‌ச்சி தோல‌ உறிச்சி புடுவேனு சொல்லு...ரெண்டு , மூனு நாள் வேல‌ முடியுற‌வ‌ரைக்கும் யாரயும் விட்டுடாத.வேலா வேலைக்கு சாப்பாடு, டீ , பொட்ட‌ல‌ம் க‌ண‌க்கு பிள்ளைகிட்ட‌ வாங்கி ‌கொடுக்க‌ சொல்லி இருக்கேன் கொடுத்துடு .

நிம்ம‌தியாக‌ பேப்ப‌ர் ப‌டிக்க ஆர‌ம்பித்தார்..












No comments: